மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மதுக்கடை உள்ளது.
கீழக்கரை
ஏர்வாடி தர்கா செல்லும் வழியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மதுக்கடை உள்ளது. இங்கு ஏராளமான மதுப்பிரியர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் மாணவிகள், பணிமுடிந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி அருகே உள்ள மதுக் கடையால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகரித்து வருகிறது. பெண்கள், மாணவர்கள் அந்த சாலையில் தயக்கத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. மேலும் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
ஆகவே அந்த மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துவிட்டோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.