உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி

Published On 2022-06-12 08:48 GMT   |   Update On 2022-06-12 08:48 GMT
  • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
  • 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ராமநாதபுரம்

நாளை (12-ந்தேதி) குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு சாரா அமைப்புகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அரண்மனை வரை விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையில் நடந்தது. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர், சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மனிதவள ஆள்கடத்தல் தடுப்புபிரிவு குழுவினர் கலந்து கொண்டனர். கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News