உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-07-19 08:39 GMT   |   Update On 2022-07-19 08:39 GMT
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
  • மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாண வர்களுடன் செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 293 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

முன்னதாக மாமல்ல புரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாண வர்களுடன் செஸ் விளை யாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News