உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.

ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-07-06 08:34 GMT   |   Update On 2023-07-06 08:34 GMT
  • ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
  • ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,

பொது மக்களிடம் வரி வசூல் செய்யும் போது ரொக்கமாக பெறாமல் ஆன்-லைன் முறையில் வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் தாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும்.குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டும் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், மண்டபம் பி.டி.ஓ., க்கள் முரளிதரன், நடராஜன், பங்கேற்றனர்.

Tags:    

Similar News