தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம்
- நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவி லான போட்டிகளில் வெற்றி களை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றி ருக்க வேண்டும். மேலும் அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு, பல்கலைக்கழகங்கள் நடத்திய போட்டிகள், ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் விளையா டியிருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவ ராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்ற வராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப் பிக்க முடியாது.
மேற்கண்ட தகுதியுடை யவர்கள் www.sdat.tn.gbv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.