உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு

Published On 2023-04-24 08:20 GMT   |   Update On 2023-04-24 08:20 GMT
  • ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
  • உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணியை சேர்ந்தவர் முனீசு வரன்(வயது21). இவருக்கும் பெருங்குளத்தை சேர்ந்த காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோ ருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் முனீசுவரன் ராமநாதபுரத்திற்கு சென்று தனது சித்தியிடம் ரூ.58 ஆயிரம் வாங்கினார். பின்னர் உறவினர் சதீசு வரனுடன் அங்கிருந்து சேர்வைக்காரன் ஊரணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர்கள் பெருங்குளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்களை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு முனீசு வரனும், சதீசுவரனும் அங்கிருந்து ஓடி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீசில் முனீசுவரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News