உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு

Published On 2023-09-08 08:09 GMT   |   Update On 2023-09-08 08:09 GMT
  • முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
  • தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரி வித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வக்கீல், தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி. இவர் தி.மு.க. செய்தி தொடர்பா ளராகவும் இருந்து வருகி றார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை 2.0 என்ற பெயரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதனை சிறப்பாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னி லையில் இரா.ராஜீவ் காந்திக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிலையில் நேற்று இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தார்.

மண்டபம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) வாலாந்தரவை பிரவீன் குமார் (மத்திய), தேர்போகி முத்துக்குமார், (கிழக்கு), புதுமடம் நிலோபர் கான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News