உள்ளூர் செய்திகள்

கருணாநிதி படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2022-08-08 08:55 GMT   |   Update On 2022-08-08 08:55 GMT
  • கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
  • கருணாநிதி புகழை பறை சாற்றும் வகையில் கைகளை உயர்த்தி புகழ் கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மவுன ஊர்வலமாக வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு, மத்திய கொடி கம்பம் வழியாக அரண்மனையை வந்தடைந்தனர்.

அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த கருணாநிதி படத்திற்கு காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அனைவரும் ஒன்று கூடி கருணாநிதி புகழை பறை சாற்றும் வகையில் கைகளை உயர்த்தி புகழ் கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் தி.மு.க. செயலாளரும், நகர் மன்றத் தலைவருமான.கார்மேகம், இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் அமைச்சர்கள் சுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி.

முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளர் ஹமீது சுல்தான், மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் அகமது, கவுன்சிலர்கள் சுகைபு, முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News