உள்ளூர் செய்திகள்
- சாயல்குடி அருகே புனித பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
- திருவிழா திருப்பள்ளியும், அற்புத திருப்பலி தேர் பவனியும் நடந்தது.
சாயல்குடி
சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் ஊராட்சி பெரியநாயகிபுரம் புனித பரலோக அன்னை ஆலய தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அசன விருந்து, ஜெபமாலை பவனி, திருப்பலி, ஒப்புரவு வழிபாடு, புது நன்மை, நற்கருணை பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம் சப்பரபவனியை தொடர்ந்து திருவிழா திருப்பள்ளியும் அற்புத திருப்பலி தேர் பவனியும் நடந்தது. இதில் பெரிய நாயகிபுரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், சாயல்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.