உள்ளூர் செய்திகள்

மாநில போட்டிக்கு அரசு பள்ளிகள் தகுதி

Published On 2022-11-21 07:03 GMT   |   Update On 2022-11-21 07:03 GMT
  • தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
  • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது ஆண்கள் பிரிவில் பெரியபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள், 14, 17 வயது பெண்கள் பிரிவில் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன.

இந்த அணிகள் நாமக்கலில் டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்து கொள்கின்றன. 19 வயது பிரிவு ஆடவர் பிரிவில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற பனைக்குளம் பகுர் தீன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஜமாஅத் தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம் (மேற்கு), ஹம்சத் அலி (கிழக்கு) மற்றும் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ரவி, உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News