உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2023-09-04 12:56 IST   |   Update On 2023-09-04 12:56:00 IST
  • பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
  • விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஏ.ஷாஜகான் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர ரேணுகா வர–வேற்றார்.

விழாவல் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக் கப்பட்ட தொகுதியாக இருந் தது. இப்போது வளர்ச்சி யடைந்த தொகுதியாக மாறி வருகிறது. அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் தீட்டி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். முதுகுளத்தூர் தொகுதியில் பைபாஸ் வேலை முடுக்கிவிடப்பட் டுள்ளன.

கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும். முதுகு ளத்தூர் அமைதியான நகர மாக திகழ்கிறது. இங்கு சாலைப்பணிகள் முடுக்கி விடப்பட்ருள்ளன. இங்கு மதரீதியாகவோ, சாதி ரீதி யாகவோ பாகுபாடு கிடை யாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.

அடுத்தகட்ட பணியாக இமானுவேல் சேகரனுக்கு செல்லுரர் கிராமத்தில் சிலை, முதுகுளத்தூரில் தேவர் மஹால், அழகுமுத் துக்கோன் சிலை, கட்டப் பொம்மனுக்கு சிலை, ஏர்வாடியில் இஸ்லாமியருக்கு மஹால், காமராஜருக்கு சிலை ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய குமார், தாளாளர் செய்யது மூமின், ஜமாத் தலைவர் காதர்முகைதீன், முகம்மது யாக்கோப், சாகுல்ஹம்து, பைசல் முகம்மது உள்பட மரணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவு தீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News