உள்ளூர் செய்திகள்

கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிறப்பு கணினி திருத்த முகாம் நடைபெற்றது.

கணினி திருத்த முகாம்

Published On 2023-07-05 07:20 GMT   |   Update On 2023-07-05 07:20 GMT
  • கமுதி அருகே கணினி திருத்த முகாம் நடந்தது.
  • இந்த முகாம் வருகிற 8-ம் தேதி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிறப்பு கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் சேதுராமன் அறிவுரையின் படி, கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில், கிழக்கு வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் தலைமையில், கணினி திருத்த முகம் நடைபெற்றது.

இந்த முகாமில் கணினி யில் விடுபட்ட புழை எண் கள், விஸ்தீரன பிழை உள் பட பல்வேறு திருத்தங்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கமுதி, செங்கப்படை, தவசிகுறிச்சி சம்பகுளம், சடையனேந் தல்பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் போன்ற கிராமப் பகுதியில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நாகநாதன், அபிராமம் வருவாய் ஆய்வாளர் கலாராணி, கோவிலாங் குளம் வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் அப்பகுதிகளில் சிறப்பு கணினி திருத்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு வருவாய் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News