உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உரையாடிய காட்சி.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

Published On 2023-09-02 06:57 GMT   |   Update On 2023-09-02 06:57 GMT
  • பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
  • தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். அப்போது அரசின் திட்டங்கள் பெற்று கிடைக்கிறதா? என கேட்ட றிந்தார். மேலும் பல்வேறு துறையின் மூலம் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப் பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு அவர்களிடம் கலெக்டர் கேண்டு கொண்டார்.

பின்னர் கிராமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா?, ரேசன் கடைகளில் சரியாக பொருட்கள் வழங்கப்படு கிறதா? குடிநீர் விநியோகம் சரியாக இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

கோரிக்கைகள் நிறை வேறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் தகவல் கொடுக்குமாறும், தொடர்புடைய அலுவ லர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விடப்படும் என்றும் அவர்களிடம் கலெக்டர் உறுதியளித்தார். மேலும் கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News