- ரேசன் கடையில் கலெக்டர் சோதனை நடத்தினார்.
- இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் ராம்கோ கூட்டுறவு சங்கம் மூலம் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா? என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு நியாய விலைக்கடைகளில் அங்குள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் இருப்பதை கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். அதே போல் வழங்கும் உணவுப் பொருட்களின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் காலதாமதமின்றி வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.