உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.

சி.ஐ.டி.யு. சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published On 2023-07-26 08:06 GMT   |   Update On 2023-07-26 08:06 GMT
  • ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
  • பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 55-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் முத்துவிஜயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலை வா் சந்தானம் ஆா்ப்பாட்டதை தொடங்கி வைத்தாா்.

நிா்வாகிகள் குருவேல், சுடலைகாசி, மணிகண்ணு, வாசுதேவன் ஆனந்த், ஞான சேகா், மாா்க்சிஸ்ட் தாலுகா செயலாளா் செல்வராஜ், மாவட்டச் செயலாளா் சிவாஜி ஆகியோா் பேசினா்.

இதில், தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் பணப்பலன்களை இரட்டிப் பாக்க வேண்டும். பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 55-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News