உள்ளூர் செய்திகள்

உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு இழப்பீட்டு தொகை பெற அழைப்பு

Published On 2022-12-29 06:06 GMT   |   Update On 2022-12-29 06:06 GMT
  • உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு நிலம் அளித்த பட்டாதாரர்கள் இழப்பீட்டு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டம் உப்பூர் அனல் மின் திட்டம் நில எடுப்பு தனி வட்டாட்சியர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், சோளந்தூர் உள்வட்டத்தில் அமைந்துள்ள வளமாவூர், திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய வருவாய் கிராமங்களில் உப்பூர் அனல் மின்நிலையம் அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க ப்பட்டது.

பட்டா தாரர்களுக்கு 3 முறை முறையான அழை ப்பாணை அனுப்பியும், கிராமங்களில் முகாம்கள் நடத்தியும் 110 பட்டா தாரர்கள் ஆஜராகி உரிய ஆவணங்கள் செலுத்தி இழப்பீட்டுத் தொகை பெற முன்வர வில்லை.

வளமாவூர் கிராமத்தில் 42 பட்டாதா ரர்களுக்கு ரூ.1,97,03,163 இழப்பீட்டு த்தொகையும், திருப்பா லைக்குடி கிராமத்தில் 7 பட்டாதா ரர்களுக்கு, ரூ.10,59,678 இழப்பீ ட்டுத்தொ கையும், உப்பூர் கிராமத்தில் 61 பட்டா தாரர்களுக்கு, ரூ.2,00,30,127 இழப்பீட்டு த்தொகையும் தரப்பட வேண்டியு ள்ளது. மேற்படி பட்டாதாரர்களோ, அல்லது அவர்களின் வாரிசு தாரர்களோ இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தவறும் பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் சம்மந்த ப்பட்ட பட்டாதாரர்களது இழப்பீட்டுத்தொகை வைப்பீடு செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News