உள்ளூர் செய்திகள்

தன்னார்வலருக்கு விருது

Published On 2022-10-16 08:46 GMT   |   Update On 2022-10-16 08:46 GMT
  • தன்னார்வலருக்கு விருது வழங்கப்பட்டது.
  • நிறுவனர் சபரிமலைநாதனுக்கு, நவாஸ் கனி எம்.பி. விருது வழங்கினார்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் நேரு யுவகேந்திரா சார்பில் பேச்சு, கவிதை, நடன போட்டி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் ராமநாதபுரம் எம்.பி. கலந்துகொண்டனர்.

இதில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தொண்டு நிறுவனங்களில், முத்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டு, அதன் நிறுவனர் சபரிமலைநாதனுக்கு, நவாஸ் கனி எம்.பி. விருது வழங்கினார்.

Tags:    

Similar News