உள்ளூர் செய்திகள்

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்பட்ட அரியனேந்தல் ஊராட்சிக்கு முதல்-அைமச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

அரியனேந்தல் ஊராட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது

Published On 2023-08-14 11:28 IST   |   Update On 2023-08-14 11:28:00 IST
  • அரியனேந்தல் ஊராட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது.
  • இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பரமக்குடி

2021-2022-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை யில், சுகாதாரத்தில் சிறப் பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு முன் மாதிரி கிராம விருது, பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன் மாதிரி கிராம விருது, கேடயம், தலா ரூ.15 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, 2022 - 23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடு களுக்கான முன் மாதிரி கிராம விருது ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட அரிய னேந்தல் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கு.மணி முத்துவிடம் மாநில அளவி லான கிராம விருது, பரிசுத் தொகையாக ஊராட்சிக்கு ஊக்க நிதியாக ரூ. 15 லட்சம் மற்றும் கேடயத்தினை வழங்கினார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News