உள்ளூர் செய்திகள்

மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-13 07:22 GMT   |   Update On 2022-12-13 07:22 GMT
  • ராமநாதபுரத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க.சார்பில் நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் தி.மு.க. ஆட்சியை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.

மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புதுமடம் தர்வேஸ், ஸ்டாலின் ஜெயசந்திரன், சரவணக்குமார், செந்தில் குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராமநாதபுரம் நகர துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, கீழக்கரை நகர அவைத்தலைவர் சரவணபாலாஜி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சுரேஷ், நகர முன்னாள் செயலாளர் இம்பாலா உசேன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மின் கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News