உள்ளூர் செய்திகள்

இளம்பெண்-கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-07-18 07:02 GMT   |   Update On 2023-07-18 07:02 GMT
  • இளம்பெண்-கல்லூரி மாணவி மாயமாகினர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் தும்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(வயது32). இவரது மனைவி மும்தாஜ் பேகம். இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்க ளாகிறது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபித்துக் கொண்டு மும்தாஜ் பேகம் வீட்டை விட்டு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்களிடம் விசாரித்தும் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் அப்துல் லத்தீப் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மும்தாஜ் பேகத்தை தேடி வருகின்ற னர்.

பேரையூர் பி.தொட்டி யபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் இன்பா(20) விருதுநகர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகி றார். சம்பவ த்தன்று கல்லூ ரி க்கு சென்ற வர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News