உள்ளூர் செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை

Published On 2022-07-07 09:20 GMT   |   Update On 2022-07-07 09:20 GMT
  • வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், சமையன்வலசையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). எம்.எஸ்.சி, பி.எட் முடித்துள்ள இவருக்கு படிப்புக்கேற்ற வேைல தேடி வந்தார். இவரது மனைவி லட்சுமி ராமநாதபுரம் அரசு கல்லூரியில் விரிவுரை யாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News