உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை அதிகாரிகள் 12 பேர் அதிரடி இடமாற்றம்

Published On 2023-07-26 08:01 GMT   |   Update On 2023-07-26 08:01 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
  • புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராக பணியாற் றிய மார்டின் ராஜன் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பணியிடத்திற்கும், தொண்டி தனி வட்டாட்சியர் அலகு 2-ல் பணியாற்றிய ஸ்ரீதரன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், முதுகு ளத்தூர் தனி வட்டாட்சியராக பணியாற்றிய தென்னரசு ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும்,

பரமக்குடி தனித்துணை வட்டாட்சியர் அலுவலக பணியாற்றிய காதர் மைதீன் தனி வட்டாட்சியராக ஆதிதிராவிடர் நலப்பிரிவிற் கும், பரமக்குடி தனி வட்டாட்சியராக பணியாற் றிய சடையாண்டி முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் சாந்தி ஆதிதிராவிடர் நலப்பிரிவிற்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன் மணி, தனி வட் டாட்சியர் அலகு-2 பிரிவிற்கும்,

ராமநாதபுரம் தனி வட்டாட்சியர் ஜமால் முகம்மது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக் குழு அலுவலராக வும், கடலாடி முன்னாள் வட்டாட்சியர் பரமசிவம் ராம–நாதபுரம் உதவி மேலாளர் டாஸ்மாக் லிமிடெட் பிரி–விற்கும், முன்னாள் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர் முக உதவியாளர் தனி வட் டாட்சியராக அலகு 4-ல் பணியாற்றிய முருகவேலு ராமநாதபுரம் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக மேலாளராகவும், பரமக் குடி தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) இந்து அறநிலையத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் கழக தலைமை உதவியாளராக பணியாற்றிய சத்திய பாமா பரமக்குடி தனி வட்டாட்சியர் (இந்து அற–நிலையத்துறை) நியமிக் கப்பட்டுள்ளனர். இந்த உத்த–ரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.

இந்த உத்தரவு குறித்து விடுப்பு விண்ணப்பமோ, முறையீடோ ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. பணி நியமனம் பெற்றவர் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News