உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வடியாத மழைநீர்

Published On 2023-11-27 09:01 GMT   |   Update On 2023-11-27 09:01 GMT
  • பன்னம்பாறை வேதக்கோவில் தெருவில் தசரா நேரத்தில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மழைநீர் வடியாமல் உள்ளது.
  • இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வேதக் கோவில் தெருவில் தசரா நேரத்தில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஒரு மாதத்தி ற்கும் மேலாக தேங்கிய மழை நீரில் தான் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் கால்களில் சேற்றுப்புண் ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.

இது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு களை அதிகாரி களிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News