உள்ளூர் செய்திகள்
- ஊத்தங்கரை பகுதியில் குளிர்ந்து காற்றுடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
- அதிகப்பட்சமாக பெணுகொண்டாபுரத்தில் 29.3,மில்லி மீட்டர் மழை பதிவானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதியில் குளிர்ந்து காற்றுடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
அதில் போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழிவு காணப்பட்டது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த காற்று மட்டும் வீசியது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில், அதிகப்பட்சம் பெணுகொண்டாபுரத்தில் 29.3, பாம்பாறு அணையில் 19, பாரூரில் 14.06, ஊத்தங்கரையில் 12.14, போச்சம்பள்ளியில் 9.2 மில்லிமீட்டரில் பதிவானது.