சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: எடப்பாடி, வாழப்பாடியில் கன மழை
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- விடிய, விடிய வரை சாரல் மழையாக பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது .
குறிப்பாக எடப்பாடி, நத்தக்கரை, வாழப்பாடி, ஆனைமடுவு, டேனீஸ்பேட்டை உள்பட பல பகுதகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் நேற்றிரவு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
சேலம் மாநரில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய, விடிய வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 7.7, ஏற்காடு 1.6, வாழப்பாடி 14, ஆனைமடுவு 10, ஆத்தூர் 4, தம்மம்பட்டி 8, ஏத்தாப்பூர் 5.4, கரியகோவில் 4, வீரகனூர் 4, நத்தக்கரை 13, சங்ககிரி 4.4, எடப்பாடி 19, மேட்டூர் 2.2, டேனீஸ்பேட்டை 10 மி.மீ. என மாவட்டம்முழுவதும் 107.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.