உள்ளூர் செய்திகள்

பிரமாண்ட தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-10-28 11:43 IST   |   Update On 2023-10-28 11:43:00 IST
  • ஆலங்குடியில் இன்று பிரமாண்ட தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
  • சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

ஆலங்குடி,  

புதுக்கோட்டை மா வட்டம் ஆலங்குடியில் மாவ ட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து கலை ஞர் நூற்றாண்டு விழா வை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவை இன்று நடத்தியது.

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் விண்ணப்பம் வழங்கி தொடங்கி வைத்தார்.

முகாமில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழக முழுவதும் இருந்து 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவ ர்களை தேர்ந்தெடுத்தனர். இதில்

8-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல், பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் என இருபாலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

முகாமில் அந்தந்த துறை சார்ந்த படித்த இளைஞ ர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் வகையில் தனித்த னி யாக அறைகள் ஒதுக்கப்ப ட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

அவற்றை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தனர். காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி வளாகத்திலேயே மதிய உணவு வழங்கப்பட்டது. பணிக்காக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று மாலை அமைச்சர் மெய்யநாதன் பணிநியமான ஆணைகளை வழங்க உள்ளார்.

Tags:    

Similar News