உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.