ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு
- பொன்னமராவதியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு
- தம்பதி உள்பட 3 பேர் கைது
பொன்னமராவதி
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 39). இவர் சம்பவத்தன்று தனது மனைவி ஏ.டி.எம். கார்டினை கொண்டு வந்து பொன்ன மராவதி பொன்-புதுப்பட்டி யில் உள்ள தேசிய மயமாக்க ப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் லெட்சுமணனுக்கு உதவுவது போல் நடித்து ஏ.டி.எம்.கார்டை மாற்றி அவரிடம் போலி கார்டை கொடுத்து ள்ளார்.
அந்த கார்டை பயன்படுத்தி யபோது பணம் வரவில்லை. இது குறித்து தனது மனை விக்கு செல்போனில் லெட்சு மணன் தகவல் கூறியுள்ளார்.
அப்போது அவரது மனைவி செல்ேபானுக்கு ரூ.20 ஆயிரமும், அதனை தொடர்ந்து பொன்னம ராவதியில் உள்ள பிரபல கடை ஒன்றில் ரூ.20 ஆயிரத்தி ற்கு செல்போன் வாங்கி உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து லெட்சு மணன் பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பொன்னம ராவதி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ள னர். அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குளித்தலை கீழனங்கவரம் சரவணக்குமார் (29), காஞ்சீபுரம் நன்மங்கலம் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி லட்சுமி என்பதும், இவர்கள் ஏடிஎம்-கார்டை மாற்றி நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்த 40 போலி ஏடிஎம் கார்டுகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவ ற்றை பறிமுதல் செய்தனர்.