உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மெய்ய நாதன் நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-10-26 12:11 IST   |   Update On 2023-10-26 12:11:00 IST
ஆலங்குடியில் அமைச்சர் மெய்ய நாதன் நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஆலங்குடி,  

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியதாவது:-

இப்பகுதி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரையும் மேலும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பிஇ என அனைத்து சம்பந்தப்பட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இங்கு கிடைக்க பெற உள்ளது. இந்த முகாமில் 18 வயதில் முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்பகுதி பட்டதாரிகள், இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பினை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மெயயநாதன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு நடத்துவதற்கு அமைக்கப்பட்டு வரும் பந்தல்கள் மற்றும் முன்னேற்பாடு நிகழ்ச்சிகளை அமைச்சர் மெய்யநாதன் நேரடியாக பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். 

Tags:    

Similar News