உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
- கந்தர்வகோட்டை குப்பையன்பட்டியில் கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
- 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு சொந்தமான நிறைமாத பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பசுமாட்டை போராடி உயிருடன் மீட்டனர்.