உள்ளூர் செய்திகள்

12 வயது சிறுவனுக்கு 3 சக்கர சைக்கிள்

Published On 2023-10-26 06:44 GMT   |   Update On 2023-10-26 06:44 GMT
விளையாட்டில் கால்களை இழந்த12 வயது சிறுவனுக்கு 3 சக்கர சைக்கிள்

ஆலங்குடி,  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மறவன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மனோஜ்(வயது 12). இவன் விளையாடும் போது அவனுடைய இடது கால் பாதிப்படைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவனது ஒரு கால் அகற்றப்பட்டது.

இந்நிலையில் சிறுவன் மனோஜ் ஆலங்குடி சட்டமன்ற அலுவலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக அவனுக்கு 3 சக்கர மிதிவண்டி வரவழைத்து வழங்கி ஆறுதல் கூறி உதவித்தொகை அளித்தார்.

மேலும் சிறுவனுக்கு செயற்கை கால் வழங்கவும், அவனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News