உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம்

Published On 2023-09-26 12:18 IST   |   Update On 2023-09-26 12:18:00 IST
  • 15-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற்று வருகிறது
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கந்தர்வகோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பை இல்லா இந்தியா திட்ட முகாம் 15-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குப்பை இல்லா இந்தியாவை உருவாக்கும் தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் முன்னிலையில், கந்தர் கோட்டை ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

பரிசோதனைக்கு வந்த தூய்மை காவலர்களை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாரதா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News