உள்ளூர் செய்திகள்

திருமணமான வாலிபர் தற்கொலை

Published On 2023-03-10 12:01 IST   |   Update On 2023-03-10 12:01:00 IST
  • திருமணமான வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
  • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே வடவாளத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 36). மனைவி தேவி. குழந்தை இல்லை. இந்நிலையில் அவரது வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அவரது மனைவி தேவி செம்பட்டிவிடுதி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திர ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News