உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2023-07-02 12:47 IST   |   Update On 2023-07-02 12:47:00 IST
  • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா கல்குடி கிராமம் வடக்கு கோவில் காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வடக்கு கோவில்காட்டுப்பட்டியை சேர்ந்த 100 நாள் வேலைக்கு சென்ற பொதுமக்கள் சுடுகாட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். அவர்கள் இதுகுறித்து கருப்பையா குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து கருப்பையா தனது மகன் சாவில் சந்ேதகம் இருப்பதாக கூறி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News