உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2022-10-30 09:20 GMT   |   Update On 2022-10-30 09:20 GMT
  • மர்ம நபர் ஒருவர் சரண்யாவின் கைப்பையிலிருந்த ரூ.7 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார்
  • அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்த நபரை கையும் களவுமாக பிடித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்து ள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது29) இவரும் இவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் அறந்தாங்கிக்கு வந்து அவர்களுக்கு தெரிந்த நபரிடம் ரூ.7 ஆயிரம் கைமாற்றாக பெற்றுக் கொண்டு ஊர் செல்லுவதற்காக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏரி அமர்ந்துள்ளனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சரண்யாவின் கைப்பையிலிருந்த ரூ.7 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சரண்யா தனது பணத்தை ஒருவர் திருடிவிட்டதாக கூச்சலிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்த நபரை கையும் களவுமாக பிடித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்து ள்ளனர்.

அதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் (30) என்பதும், இவர்மீது ஆவுடை யார்கோவில் ஏ.டி.எம். மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரி யவந்துள்ளது.அதனை தொடர்ந்து சையது இப்ராஹிம் சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News