உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர்களை தாக்கிய வாலிபர் கைது

Published On 2022-12-19 09:34 GMT   |   Update On 2022-12-19 10:04 GMT
  • மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது நடந்தது
  • போலீஸ்காரர்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்கினி ஆற்றில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.புகார்களின்படி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரங்கிய பட்டு பாலாஆடி காத்தான் கோவில் அருகே மணல் கடத்தி வந்த சரக்கு வேனை தடுக்க முயன்றனர். அப்போது மணல் கடத்தி வந்த வேனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர்கள் தடுக்க முயன்ற போலீஸ்காரர் ராஜேஷ், வீரபாண்டி ஆகியோரை தாக்கி விட்டு மணல் வண்டியை தப்ப முயற்சித்தனர்.இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மீண்டும் மணல் கடத்தும் கும்பல் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் விக்கி என்பவரை (வயது 28) மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடவாதி ஆவனாண்டி அறிவழகன், அகிலன், கவினேசன், ரமேஷ், கருப்பையா, செல்வராஜ் ஆகிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தும் கும்பலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News