உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் உலக தற்கொலை தடுப்பு நாள் நிகழ்ச்சி
- வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கார்ப் இந்தியா சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- மன அழுத்தம், தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், மற்றும்தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கார்ப் இந்தியா சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய மருத்துவர் அதிகாரி ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மன அழுத்தம், தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், மற்றும்தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்கார்ப் இந்தியா களப்பணியாளர் கவிதா விளக்கமாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர்கள் உதவியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்டகிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.