உள்ளூர் செய்திகள்

குடும்ப பிரச்சனையில் இளம் பெண் தீக்குளிப்பு

Published On 2022-06-20 14:03 IST   |   Update On 2022-06-20 14:03:00 IST
  • குடும்ப பிரச்சனையில் இளம் பெண் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • கணவர், மாமியார் துன்புறுத்தியுள்ளனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊ ராட்சி சேர்ந்த பிரவீன்குமார் மனைவி வினோசியா (வயது 22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பிரவீன்குமார் மற்றும் அவரது தாயார் காந்திமதி ஆகிய இருவரும் சேர்ந்து வினோசியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வினோசியா தனது உடலில் மண்ணெண்ணையை தீவைத்துக்கொண்டார்.

இதை பார்த் த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

Tags:    

Similar News