உள்ளூர் செய்திகள்
- மின்னல் தாக்கி பெண் பலியானார்.
- பசுமாடும் செத்தது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே மனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கோகிலா (வயது 42). இவர் நேற்று தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு ஓட்டி சென்றார். மதியம் 3 மணி அளவில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் விழுந்தது. அப்ேபாது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலாவையும், அவரது பசு மாட்டையும் மின்னல் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசுமாடும் செத்தது. இதுகுறித்து ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.