உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டைக்கு வருகிற 25-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை-கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2023-05-18 11:25 IST   |   Update On 2023-05-18 11:25:00 IST
  • புதுக்கோட்டைக்கு வருகிற 25-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
  • வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.

அனைத்து த்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், செய்தி மக்கள் தொடர் பு அலுவலர் மதியழகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News