சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
- சாலை வசதி கேட்டு கூழடைக்கண்தோப்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூழடைக்கண் தோப்பு கிராமத்தில் சுமார் 70-க்கும்மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதிக்கு குளத்தூர் ஊராட்சியை இணைக்கும் கிராம சாலை சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் சாலை வசதி கேட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகிறது. இந்த நிலையில் திருவோணம் தஞ்சாவூர் சாலையில் குளத்தூர் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர் இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.