உள்ளூர் செய்திகள்
வாராப்பூர் மாசி மக வைர தேரோட்டம்
- பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
- வாராப்பூர் மாசி மக வைர தேரோட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
வாராப்பூர் பெரிய அய்யனார், பாளையடி கருப்பண்ண சுவாமி கோவில் வைர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்று வந்தது.மார்ச் 11-தேதி பில்லி சோறு எரியும் திருவிழா நடைபெற்றது. முக்கியத் திருவிழாவான மாசி மகத் வைர தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. மா, பலா ,வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், தேரில் சுவாமி வீற்றிருக்க வாணவேடிக்கை, மங்கல இசை முழங்க கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வைரத்தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ததேர்திருவிழாவை முன்னிட்டு செம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.