உள்ளூர் செய்திகள்
வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
- வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
- சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடி படேல் நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையில்கலந்துகொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு முதலியன கோவில் நிர்வாகிகள் வழங்கினர். சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விநாயகரை தரிசிக்கவும், பூஜைகளுக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.