உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகள் உடனடியாக களையப்பட வலியுறுத்தல்

Published On 2023-02-03 05:32 GMT   |   Update On 2023-02-03 05:32 GMT
  • துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகள் உடனடியாக களையப்பட வலியுறுத்தப்பட்டது
  • நடிகை ரோகிணி பங்கேற்றார்

புதுக்கோட்டை:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விட்டனஸ் திரைப்படம் திரையிடலும், அப்படத்தின் கலைஞர்களுக்கு பாரா ட்டு விழாவும் புதுக்கோ ட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் டாலின் சரவணன் வரவேற்றார்.

இதில் கலந்து கொண்ட நடிகை ரோகிணி பேசிய போது, சாக்கடைகள், குப்பைகளை அகற்றும் சக மனிதர்களை நாம் சாதாரணமாக கடந்து செல்வது இந்த நூற்றாண்டின் அவலம். மலக்குழிக்குள் கூட மனிதர்கள் இறங்குவது இன்னும் நின்றபாடில்லை. இந்த சமூக அவலத்தை விட்டனஸ் திரைப்படம் கலைவடிவில் பேசியுள்ளது.

இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாகி இறந்து போகும் துப்புரவு பணியாளர்களின் மரணத்திற்கான நீதியின் குரலை எழுப்பி உள்ளது.

துப்புரவுப் பணியாளர்களுக்கான பணிபாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களையப்ப ட வேண்டும். இனி ஒரு மனிதர்கூட மலக்குழியில் இறங்கக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கங்கள் உட னடியாக கழிவுநீர்தொ ட்டிகளுக்குள் சுத்தம் செய்யும் கருவிகளை தருவிக்க வேண்டும். அதுவே சகமனிதன் மீதான அக்கறையையும் பொறுப்பு ணர்வையும் உறுதி செய்யும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்ம துக்கூர்ராமலிங்கம் , எம்.எல்.ஏ.சின்னத்துரை, கவிஞர் கவிவர்மன், மாநில துணைத் தலைவர்கள் முத்துநிலவன், நீலா, கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, இளங்கோ உள்ளிட்டோ ர்பங்கேற்றனர். பொருளாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News