உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் பெண் மாயம்

Published On 2023-01-22 12:33 IST   |   Update On 2023-01-22 12:33:00 IST
  • ஆலங்குடியில் பெண் மாயமானார்
  • ஜோதி சற்று மனநலம் பாதிக்கபட்டவர் ஆவார்

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரின் மகள் ஜோதி (வயது 50). சற்று மனநலம் குன்றிய இவர் வீட்டின் அருகில் குளித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் அதன் பின் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்கிடைக்கவில்லை.

எனவே இது குறித்து அவரது சகோதரர் கணேசன், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து சற்று மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்.




Tags:    

Similar News