உள்ளூர் செய்திகள்

தமிழ் தேச மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-18 06:39 GMT   |   Update On 2022-10-18 06:39 GMT
  • தமிழ் தேச மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடந்தது
  • மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது.

புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ் தேச மக்கள் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தை மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைமை குழு உறுப்பினர் கென்னடி | தாமரைச்செல்வன், உதயகுமார், கவியரசன், கோவிந்தராஜ், கிருஷ்ணவேணி, பீர்முகமது, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News