உள்ளூர் செய்திகள்
தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை
- தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஆவணி மாத சஷ்டியையொட்டி நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணிமாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.