உள்ளூர் செய்திகள்

செல்வகணபதி ஆலய பூமி பூஜை

Published On 2023-03-14 12:00 IST   |   Update On 2023-03-14 12:00:00 IST
  • சிறப்பு ேஹாமம் பாலாலையம் நடத்தப்பட்டது
  • மஞ்சள் கலந்த புனித நீர் சிவாச்சார்யார்களால் தெளிக்கப்பட்ட பின்னர் பூமி பூஜை நடைபெற்றது

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமம் கலிபுல்லா நகர் காலனியில் உள்ள செல்வகணபதி ஆலயம் கட்டுவதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு யாகங்கள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதன் பின்னர் பூமி பூஜை தொடங்கியது. இதற்காக பெண்கள் மஞ்சள் நீர் எடுத்து வந்தனர். சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மஞ்சள் நீரை தெளித்து பூமி பூஜையை நடத்தினர்.இந்த தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி, ஒன்றிய குழு கவுன்சிலர் பிரகதா ரத்தினவேல், திமுக மாவட்ட பொதுகுழு உறுப்பினர் தலைவர் நாராயணன், கல்லாலங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News