உள்ளூர் செய்திகள்

அன்னவாசலில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-08-21 06:47 GMT   |   Update On 2023-08-21 06:47 GMT
  • காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
  • 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல்

புதுக்கோட்டை,

அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முத்துகிருஷ்ணன் (வயது 44), அப்துல்மஜீது (70), ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News