உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம்

Published On 2022-07-19 13:16 IST   |   Update On 2022-07-19 13:16:00 IST
  • தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
  • 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கிளைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அனைவரையும் வட்டச் செயலாளர் துரைராஜ் வரவேற்று பேசினார், கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் செல்லையா, மாவட்ட பொருளாளர் பழனிமலை மற்றும் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க கோருதல், பழைய ஓய்வூதியம் வழங்க கோருதல், இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க கோருதல், இரவு காவல் பணியை நிறுத்த கோருதல், கிராம உதவியாளர்கள் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News